தலையில் முடி வளர அகத்தியர் மருந்து



     இளமையில் தலை முடி உதிர்ந்துவிட்டால் கவலைகள் அதிகம் தோன்றும், திருமணம் மற்றும் காதல் முறிந்து போகிறது. இதற்காக நாம் முடி வளர்வதற்கு பல ஆயிரம் ருபாய் செலவு செய்து, சிகிச்சை செய்து கொண்டும், பல அயல் நாட்டு மருந்தும் பயன்படுத்த வருகிறோம். ஆனால் இதற்காக அகத்தியர் வழிகாட்டியுள்ளார்.


கையாந்தகரை சாறுநா லுபலம் யெடுத்து
ரெண்டுபலம் குன்றிமணிப்பருப்பு கலந் தரைத்து
ஒருபலம் எள் எண்ணெய்சேர்த் துகாய்ச்சி சீலை வடிகட்டி
தினம் பூசப்பா கிழவனுக்கும் குமாரன்போல் சடைகாணும்".

- அகத்தியர் குணபாடம் -

கையாந்தகரைச் சாறு நாலுபலம் எடுத்து அத்துடன் ரெண்டுபலம் குன்றிமணிப் பருப்பு சேர்த்து அரைத்து எடுத்து அதில் நல்லெண்ணய் ஒருபலம் சேர்த்துக் காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலையில் பூசிவர வயோதிகருக்கும் இளைஞர் போல முடி வளருமாம் என்கிறார் அகத்தியர்.


மருந்து நாம் செய்வது சிறிது கடினமானது, இந்த மருந்து காஞ்சிபுரம் ஸ்ரீ நாராயணா சேவா ஆசிரமத்தில் கிடைக்கிறது. இதை தினமும் பயன்படுத்தினால் தலை முடி வளர்கிறது, மற்ற எண்ணையை விட இது வேகமாக செயல்படுகிறது. இதை பயன்படுத்தி பலரும் தலைமுடி பயன் அடைந்துள்ளார்கள். இதன் விலையும் மிகவும் குறைவானது. இந்த எண்ணெய்யை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

2 comments:

அண்ணா பல்கலைகழக தேர்வில் எளிதாக தேற்சியடையும் வழிகள்


    தேர்வு என்றாலே நன்கு படிப்பவர் முதல் அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். பின் வரும் வழிமுறைகளை பின்பற்றினால் நீங்கள் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற முடியும். நல்ல மதிப்பெண்ணும் பெறலாம்.



தேர்விற்கு முன்பு :


  • பாடத்திட்டங்கள்(Syllabus) அறிந்து படிக்கவும்.
  • மாதிரி கேள்வி தாள் மற்றும் முந்தைய ஆண்டு கேள்வி தாள் பார்க்கவும்.
  • சிறந்த புத்தகம் மற்றும் குறிப்புகள் தேர்வு செய்து படிக்கவும்.
  • அதிக முறை கேட்டகப்பட்ட கேள்விகளை தேர்ந்தெடுத்து படிக்கவும்.
  • தேர்விற்கு முன்பு படித்த அனைத்தையும் மேற்பார்வை செய்யவும்.


தேர்வின் பொழுது :

  • பயம் இல்லாமல் தேர்வு செல்லவும்.
  • கருப்பு மற்றும் நீளம் இரண்டு நிற பேனா உபயோகிக்கவும்.
  • கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுத முயற்சிக்கவும்.
  • குறைந்தபட்சம் ஏழு  அல்லது எட்டு 2 Mark கேள்விகளுக்கு பதில் அளிக்கவும்.


மேற்கொண்ட வழிமுறைகளை பின்பற்றினால் மிக எளிதாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில்  தேர்ச்சி பெற முடியும்.

0 comments: