அஜீத்துக்கு ரூ 50 கோடி சம்பளம்... இது ஏ எம் ரத்னத்தின் நன்றிக் கடன்!

   சென்னை: பெரும் சரிவிலிருந்து தன்னை மீட்ட அஜீத்துக்கு நன்றிக் கடனாக, வரும் 2015-ல் அவர் நடிக்கும் படத்துக்கு சம்பளமாக ரூ 50 கோடியைத் தரவிருக்கிறாராம் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம்.


 தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏஎம் ரத்னம், திடீரென அதல பாதாளத்துக்குப் போய்விட்டார். தொடர் தோல்விகள் அவரை பெரும் கடனாளியாக்கிவிட்டது.
அவர் யாரை வைத்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தாரோ அந்த ஹீரோக்கள் கூட ரத்னத்தை கண்டு கொள்ளவில்லை. 


விஜய்யை வைத்து குஷி, கில்லி என இரண்டு மெகா வெற்றிப் படங்கள் தந்தவர் ரத்னம். இந்தப் படங்கள்தான் விஜய்யை பெரிய நாயகனாக்கின. பல முறை ஏ எம் ரத்னம் கேட்டும் கூட ரத்னத்துக்கு உதவ விஜய் முன்வரவில்லை.

செய்வதறியாமல் திகைத்து நின்ற நேரத்தில் தானாக வந்து தோள்கொடுத்து ரத்னத்துக்கு உதவியவர் அஜீத். அதன்பிறகு உருவான படம் தான் ஆரம்பம். இந்தப் படத்தால் சரிவிலிருந்த முற்றிலும் மீண்டார் ரத்னம்.


அடுத்து அவரே எதிர்ப்பார்க்காத ஒரு அதிசயம். மீண்டும் ஒரு படம் தயாரிக்க ரத்னத்துக்கு கால்ஷீட் தருவதாகவும் கவுதம் மேனன் அதை இயக்குவார் என்றும் அஜீத்தே அறிவிக்க, இதோ அந்தப் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படம் முடிந்ததும், அஜீத் அடுத்து வேறு தயாரிப்பாளருக்கு ஒரு படம் செய்கிறார். அதற்குப் பிறகு மீண்டும் ரத்னத்துக்கே படம் செய்து தருவதாக வாக்களித்துள்ளாராம் அஜீத்.

அந்தப் படம் 2015-ல் தொடங்கும் என்றும், அந்த படத்துக்காக அஜீத்துக்கு ஐம்பது கோடி சம்பளம் தரப் போவதாகவும் ஏஎம் ரத்னம் கூறியுள்ளார்.

தனக்கு ஆபத்பாந்தவனாக வந்த அஜீத்தை கவுரவப்படுத்தும் வகையில் இந்த பெரிய சம்பளத்தை அஜீத்துக்கு அளிக்கப் போவதாக ரத்னம் தெரிவித்துள்ளார்.

அப்படிப் பார்த்தால் ரஜினி, கமலுக்குப் பிறகு அதிக சம்பளம் பெறும் நடிகர் அஜீத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

முதலில் லேடி காகா, இப்போ ராகுல் காந்தி: இந்த நடிகைக்கு இவ்ளோ சீப் பப்ளிசிட்டி தேவையா?


மும்பை: பாலிவுட் நடிகை தனிஷா சிங் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து ஆடைகளை துறந்துள்ளார்.

நடிகை மேக்னா பட்டேல் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அவரது உடலில் பாஜக சின்னமான தாமரையை மட்டுமே வைத்திருந்தார்.


இந்நிலையில் அவருக்குப் போட்டியாக மற்றொரு நடிகையும் ஆடைகளை துறந்துள்ளார்.

பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் நடிகை தனிஷா சிங்கிற்கு காங்கிரஸ் மேல் திடீர் பாசம் வந்துள்ளது. உடனே அவர் தனது ஆதரவை தெரிவிக்க முடிவு செய்தார்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்ற பெயரில் ஆடைகளை துறந்து வெறும் காங்கிரஸ் கொடியை மட்டும் உடலில் போர்த்திக் கொண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.




தனிஷா சிங் தன்னை யாரும் கண்டுகொள்ளததால் இவ்வாறு நிர்வாண கோலத்தில் சீப் விளம்பரம் தேடுகிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

முன்னதாக தன்னை சைவப் பிரியை என்று கூறிக் கொள்ளும் தனிஷா ஆட்டு இறைச்சியை ஆடையாக அணிந்து போட்டோஷூட் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

90-அடி கம்பத்தில் கொடியேற்றி மாநில மாநாட்டை துவங்கி வைத்தார்





திருச்சி: தி.மு.க-வின் 10 வது மாநில மாநாடு திருச்சியில் துவங்கியது. மலைக்கோட்டை மாநகர் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூரில் 250 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாடு நடக்கிறது.  காலையில் முதல் நிகழ்ச்சியாக கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 90 அடி உயர கம்பத்தில் கட்சி தலைவர் கருணாநிதி கொடியேற்றி துவக்கி வைத்தார் .  தி.மு.க மாநில மாநாடு இன்றும் நாளையும் திருச்சியில் நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

0 comments: