90-அடி கம்பத்தில் கொடியேற்றி மாநில மாநாட்டை துவங்கி வைத்தார்





திருச்சி: தி.மு.க-வின் 10 வது மாநில மாநாடு திருச்சியில் துவங்கியது. மலைக்கோட்டை மாநகர் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூரில் 250 ஏக்கர் பரப்பளவில் இந்த மாநாடு நடக்கிறது.  காலையில் முதல் நிகழ்ச்சியாக கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில் 90 அடி உயர கம்பத்தில் கட்சி தலைவர் கருணாநிதி கொடியேற்றி துவக்கி வைத்தார் .  தி.மு.க மாநில மாநாடு இன்றும் நாளையும் திருச்சியில் நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

0 comments: